இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதலில் 7 பாக். வீரர்கள் பலி

புதுடில்லி : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
7 பேர் பலி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிம்பெர் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று நள்ளிரவு இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைப் பகுதியில் பாக்., படைகளும் தாக்குதல் நடத்தி உள்ளன. 
பாக்., படைகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், தொடர்ந்து வருவதால் பாக்., தூதரக அதிகாரிக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.

Comments