இந்திய ராணுவ வீரர் ஒருவர் பனிப்பாறைக்கு கீழே 6 நாட்கள் உயிரை பிடித்துக்கொண்டு இருக்க முடியும்போது, நாட்டின் வளர்சிக்காக நம்மால் ரூபாய் நோட்டுகளை மாற்ற சில மணி நேரம் வரிசையில் நிற்க முடியாதா? என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கேட்டுள்ளார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ” ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, 6 நாட்கள் 35 அடி பனி பாறைகளின் கீழே மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சிக்கியிருந்து உயிரோடு மீட்கப்பட்டார். நாட்டின் வளர்சிக்காக நம்மால் ரூபாய் நோட்டுகளை மாற்ற சில மணி நேரம் வரிசையில் நிற்க முடியாதா? ” என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment