சுவிஸ் வங்கி பணத்தை மீட்க என்ன நடவடிக்கை?.. டி ராஜேந்தர்


சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என ல‌ட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தான் வரவேற்பதாக கூறிய அவர், இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பது சரி, சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பண பட்டியல் ஏன் வரவில்லை எனக் கூறினார். மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் ராஜேந்தர் தெரிவித்தார்.

Comments