
கபாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் இயக்குனர் பா. இரஞ்சித்திடம் கதை கேட்டுள்ளார். கதை பிடித்து போக இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இத்திரைப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ், தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மூலம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார். அதன் பின் இந்த கூட்டணி குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இயக்குனர் பா. இரஞ்சித் லொக்கேஷன் பார்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பா. இரஞ்சித் கடந்தவாரம் மும்பை சென்று திரும்பியுள்ளார். ஏற்கனவே ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படமான பாட்ஷா, மும்பை பின்னணியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தற்போது இயக்குனர் பா. இரஞ்சித் மும்பையில் லொக்கேஷன் பார்த்த செய்தி ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது.
இயக்குனர் ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் 2.0 படப்பிடிப்பு முடிவடைந்ததும், சூப்பர் ஸ்டார் அடுத்த படத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Comments
Post a Comment