குழந்தையின்மை யால் தவிக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும்போது, கணவரின் விந்து அணுக்களை மருத்துவர் சோதிப்பது வழக்கம். இதற்கு கணவர், மருத்துவமனைக்கு சென்று விந்து, 'சாம்பிள்' எடுத்து தரவேண்டும். ஆனால், மருத்துவமனையில் தரப்படும் அறைக்கு வெளியே, மேலும் சிலர் சாம்பிள் தர காத்திருப்பது பெரிய சிக்கல். மருத்துவ பரிசோதனைக் கூடங்களிலோ, கழிப்பறைக்குப் போய் சாம்பிள் எடுக்க வேண்டும். இது, மேலும் சிக்கல். இந்த சிக்கல்களை போக்க, மெடிக்கல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், 'யோ' என்ற கையடக்க சாதனத்தை உருவாக்கியிருக்கிறது. ஐபோன் அல்லது சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போனுடன் பொருத்தக்கூடிய யோ சாதனத்தை வைத்து, வீட்டிலேயே விந்து திரவத்தில் உள்ள விந்தணுக்களின் நீந்தும் வேகம், அடர்த்தி, எத்தனை சதவீத அணுக்கள் செயல்படாமல் இருக்கின்றன என்பது போன்ற விபரங்களை கண்டறிய
முடியும் என்கிறது இதை உருவாக்கிய நிறுவனம். யோ சதானத்தில் ஒரு கண்ணாடித் தகடு, விந்தை உறிஞ்சும், 'பிப்பெட்' ஒரு நுண்ணோக்கி ஆகியவை இருக்கும். நுண்ணோக்கியை மொபைல் கேமராவுடன் இணைந்திருக்கும் படி பொருத்தி, கண்ணாடித் தகடில் விந்து திரவத்தை வைத்து, யோ சாதனத்துடன் இணைத்தால் போதும். உடனே யோ சாதனத்திற்கான மொபைல் செயலி, விந்தணுக்களின் தன்மையை அலசி, 'ரிசல்ட்'டை தந்துவிடும்.
செயற்கை கருத்தரிப்பை நாடவேண்டிய தம்பதிகளுக்கு, 3,385 ரூபாய் மதிப்புள்ள யோ சாதனம் ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக கணவன்மார்களுக்கு
முடியும் என்கிறது இதை உருவாக்கிய நிறுவனம். யோ சதானத்தில் ஒரு கண்ணாடித் தகடு, விந்தை உறிஞ்சும், 'பிப்பெட்' ஒரு நுண்ணோக்கி ஆகியவை இருக்கும். நுண்ணோக்கியை மொபைல் கேமராவுடன் இணைந்திருக்கும் படி பொருத்தி, கண்ணாடித் தகடில் விந்து திரவத்தை வைத்து, யோ சாதனத்துடன் இணைத்தால் போதும். உடனே யோ சாதனத்திற்கான மொபைல் செயலி, விந்தணுக்களின் தன்மையை அலசி, 'ரிசல்ட்'டை தந்துவிடும்.
செயற்கை கருத்தரிப்பை நாடவேண்டிய தம்பதிகளுக்கு, 3,385 ரூபாய் மதிப்புள்ள யோ சாதனம் ஒரு வரப்பிரசாதம். குறிப்பாக கணவன்மார்களுக்கு
Comments
Post a Comment